தீண்டத் தீண்ட சுடும் விரல்
தேகம் எங்கும் அவள் நிழல்
காதல் மொழியில்
காற்றில் கலக்கும்
அவள் குரல்...
இமைகள் நான்கும்
தாளம் போட
இதழ்கள் மூடி
இசையைத் தேட
மௌனப் பெருமூச்சு
பேரிசையானது...
இச்சைப் பெருங்கடல்
மோகப் பேரலை
கரை சேர விரும்பவில்லை
மூழ்கித் தவித்தோம்
திளைத்தோம்...
Comments
Post a Comment