ஜனநாயகம்

பெருந்தொற்றுக்கு ஆளாகி 
அப்பன் செத்தான்
சவம் வீடு வரவில்லை
அம்மா காரியின் கண்ணீரில் வீடு நனைந்தது
தேற்ற வழியில்லை

யார் குண்டி குளிர நடத்துகிறார்கள் 
ஆன்லைன் வகுப்புகளையும் பரிட்சைகளையும்
எதை சொல்லி நியாயப் படுத்துவார்கள்
"ஏனைய அறுபத்தொன்பது மாணவர்கள் வீட்டில் சாவு இல்லை என்றா?"

என் அப்பன் செத்ததால்
இது என் தனிப்பட்ட பிரச்சனையோ?
அப்போ என்ன மயித்துக்கு
பெரும் தொற்று என்று கூவுகிறார்கள்?

தனி அறை தனி இருக்கை கொண்டு
ஆன்லைனில் பேசும் அவனுக்கு
இந்தப் பக்கத்து ஓலங்கள் கேட்கப்போவதில்லை
கேட்டாலும் கண்டுகொள்ளப் போவதில்லை

வாழ்க ஜனநாயகம்!
வளர்க பாரதம்!

                        

Comments

Post a Comment

Popular Posts