Friday, 4 June 2021

ஜனநாயகம்

பெருந்தொற்றுக்கு ஆளாகி 
அப்பன் செத்தான்
சவம் வீடு வரவில்லை
அம்மா காரியின் கண்ணீரில் வீடு நனைந்தது
தேற்ற வழியில்லை

யார் குண்டி குளிர நடத்துகிறார்கள் 
ஆன்லைன் வகுப்புகளையும் பரிட்சைகளையும்
எதை சொல்லி நியாயப் படுத்துவார்கள்
"ஏனைய அறுபத்தொன்பது மாணவர்கள் வீட்டில் சாவு இல்லை என்றா?"

என் அப்பன் செத்ததால்
இது என் தனிப்பட்ட பிரச்சனையோ?
அப்போ என்ன மயித்துக்கு
பெரும் தொற்று என்று கூவுகிறார்கள்?

தனி அறை தனி இருக்கை கொண்டு
ஆன்லைனில் பேசும் அவனுக்கு
இந்தப் பக்கத்து ஓலங்கள் கேட்கப்போவதில்லை
கேட்டாலும் கண்டுகொள்ளப் போவதில்லை

வாழ்க ஜனநாயகம்!
வளர்க பாரதம்!

                        

1 comment:

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...