அன்பின் மலர்


மன்னிக்கவும்! 
என்னை இரக்கம் இல்லாதவன்
என்று கூப்பிடும் முன்
இதை நினைவில் கொள்ளுங்கள்! 
உங்களிடம் அன்பின் மலரை நீட்டவோ
புன்னகை பூக்கவோ
என்னிடம் அன்பு கையிருப்பில்
இல்லை! 
என்னிடம் அன்பைக் கடன் வாங்கியவர்களும், 
களவாடியவர்களும், 
அதைத் திருப்பி தருவதில் 
தயக்கம் காட்டுகிறார்கள்! 
அதனால் என்னிடம் எதையும் எதிர்ப்பாக்காதீர்கள்!
உங்களை பார்த்தவுடன்
என் முகம் மலரவில்லை   எனில்
நினைத்துக் கொள்ளுங்கள்
இன்று இந்த செடிக்கு
யாரும் அன்பை ஊற்றவில்லை என்று... 

                                      - மகி

Comments

Popular Posts