பந்தயம் எனக்கானதல்ல
என்னை ஓடச் சொல்லாதீர்கள்!
மூச்சிரைக்க ஓட
நான் அவர்களைப் போல
பந்தயக் குதிரை அல்ல!
தலைதெறிக்க ஓடினால் தான்
நான் குதிரை என்றால்
நீங்கள் சொல்வது போல
நான் கழுதையாகவே இருந்து விடுகிறேன்!
எனக்கு ஏற்ற சுமைகளோடு
மெதுவாக வந்து சேரத்தான் போகிறேன்!
அன்றியும் வழியில் உள்ள
புற்களையும் பூக்களையும் ருசிக்க
யாரேனும் இருக்க வேண்டும் தானே...
-மகி
💥
ReplyDelete🔥
ReplyDelete