குழந்தை வளர்ப்பு
தவமிருந்து பெற்ற மகனை
சீவப்பட்ட தந்தையின் கொம்புக்கு
பயந்து
தப்பிக்க வழி அறியாமல்
வாழும் தாய்
வேண்டுமானால் அன்பு நிறைந்ததாக வளர்க்கலாம்
ஒடுக்கப்பட்ட தாயின்
பயத்தை கண்டு
களிப்புற்று
மீசை முறுக்கும்
தந்தை
அச்சுப் பிசகாமல்
ஆதிக்க கொம்பை சீவி விடத்தான் செய்வார்...
-அகல்
🖤🖤
ReplyDelete