Saturday, 30 December 2017

போர் ! ஆமாம் போர் !

அறுபது வயதிலும் அயராமல்
அழகிகளுடன் ஆடும் இவருக்கு,
அரசியலுக்கு வர முடிவெடுப்பதற்குள்
முடியனைத்தும் கொட்டிவிட்டது!
தமிழன் என்று சொல்லிக்கொள்வார்
அதேநேரத்தில்
தமிழனுக்கு பிரச்சினை வந்தால்
தலைமறைவாகிவிடுவார்!
எதற்கெடுத்தாலும் கையை மேலே
காண்பிப்பதாலோ என்னவோ
காவி வேட்டிகளும்,கட்சிகளும்
இவரை பின்தொடர்கின்றனர்!
தலைவா!!!தலைவா!!!
என்று கோஷமிட்ட கூட்டம்
இப்போது நாட்டுக்கே தலைவராக்க
துணிந்து விட்ட சோகம்!
கூத்தாடியை கும்பிட்டு
என் பாட்டன் தவறு இழைத்தான்
அந்த பாவம் என் கால்களை
இன்னும் சுற்றுகிறது!
என் பிள்ளையயையும் அது சுற்றுமோ?
அவர்களை குறைகூறவில்லை
அனைவரும் நல்ல நடிகர்கள்
ஆனால்
எல்லா இடத்திலும் நடிக்காதீர்கள்!!!
                                            -மகி

Thursday, 21 December 2017

கண்ணீர் கரையில்

ஓ கடல் மாதா...
படகுகள் மிதப்பது தண்ணீரில் அல்ல
என் கண்ணீரில்!
கரையில் ஒலிப்பது அலைகளின் சத்தம் அல்ல
என் அழுகுரலின் சத்தம்!
காய்வது கருவாடு அல்ல
நானும் என் மனமுமே!
கலங்கரை விளக்கம் போல காத்திருக்கிறேன்
என் சொந்தங்களை எதிர்பார்த்து
அன்னை (கடல்) என்று தானே
உன்னிடம் அவர்களை அனுப்பிவைத்தேன்!
ஆனால் நீயோ
என்னை அழவைக்கிறாய்!
ஓ அலைகளே...
அழையா விருந்தாளியாக வந்து
எங்களை அழித்துவிட்டாய்!
கடலில் கொல்லப்படுவது
எங்களுக்கு புதிதல்ல
ஆனால் கடலே காலனாக
மாறினால் நாங்கள் என்ன செய்வோம்!

                                     - மகி

Friday, 1 December 2017

அம்மா


இலக்கணம் தெரியாது அவளுக்கு 
இருந்தும்
ஆனா ஆவன்னா சொல்லித்தர 
அவள் மறந்ததில்லை!
கணக்கு தெரியாது
இருந்தும்
தினமும் கூட்டிப் பெறுக்க
அவள் மறுத்ததில்லை!
வரலாறும் தெரியாது
இருந்தும்
ராஜாக்களின் கதையை சொல்ல
அவள் தவறியதில்லை!
மருத்துவம் படிக்கவில்லை தான்
இருந்தும்
அவளின் மிளகு ரசத்திற்கு 
பயக்காத நோய் இல்லை!
மனோதத்துவம் படித்ததில்லை
இருந்தும்
தன் பிள்ளையின் மனதை படிக்க 
அவளைப் போல ஆளில்லை!
தெரியாமலே இவ்வளவு செய்யும்
அவளின் அருமை மட்டும்
நமக்கு தெரிவதே இல்லை!

                                  -மகி

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...