Sunday, 29 April 2018

காதலித்தால் தான்
காதல் கவிதை வருமாம்
என் காதலன் யாரென
தேடினேன்!

துன்பத்திலும் பயத்திலும்
என் கரம்பற்றி நடந்தவன்
ஒருநாளில் ஒருமுறையேனும்
அவன் முகத்தில் விழிக்காமல்
இருந்ததில்லை!

நெஞ்சைத் தொட்டுப்பார்த்தால்
துடிப்பது என் இதயமா
அவன் இதயமா
தெரியவில்லை!

மூன்று மணி நண்பர்கள் என்பார்கள்,
மூன்று மணிக்கு
மனம் குழம்பி, இமை கனத்து
உறக்கமும் வேடிக்கை காட்ட
அவனை நினைக்கும்போது
நான் இருக்கிறேன் என்பான் -
மூன்று முறை மணியடித்து !

ஆம்! கடிகாரத்தின் காதலி நான்!
                  
                                      - இருதயா

Saturday, 14 April 2018

ஆஸிஃபா

கைத்தடிக்கும் கண்ணாடிக்கும்
பயந்து நடுங்கிய காவிகள்
இன்று கோயில் கருவறையில்
கருவறுத்துவிட்டார்கள்!
மதியிழந்த மதவாதிகள்
முழுமதியை சிதைத்துவிட்டார்கள்!
ரத்தவெறி பிடித்த உங்களுக்கு
சிறு ரத்தம் கசிந்தால் மட்டும் தீட்டா?
பாஞ்சாலியை காத்த கண்ணன்
ஆஸிஃபாவை வஞ்சித்தது ஏன்?
அதற்கும் மதம்தானா காரணம்?

                                            - மகி

Friday, 13 April 2018

நாடெங்கும் ipl பற்றிய
விவாதம் அரங்கேற
நாங்கள் மட்டும் கேட்க நாதியின்றி
நீதி கேட்டு தெருவில் நிற்கிறோம்!
மூச்சுக்கு முந்நூறு முறை
விவசாயம் தான் எங்கள்
மூச்சு என்று சொல்லிக்கொண்டே
எங்கள் மூச்சையும் சேர்த்து
சுவாசித்துவிடுகிறீர்!
பண்ணப் பழகடா பச்சை படுகொலையும்
என்றதால் தானோ
பட்டினிக்கொலைகளை அரங்கேற்றுகிறீர்!
நாட்டை காக்க நாங்கள்
துளிர்விட்டு எழுந்தால்
துண்டு துண்டாக
வெட்ட நினைக்கிறீர்!
ஆலமரமாக நாங்கள் இருப்பதால் தானே வெட்டுகிறீர்!
உம்மை போல் சீமைக்கருவேலமரமாக
இருந்திருந்தால் வேடிக்கை
பார்த்திருப்பீர்கள் அல்லவா???

                                       - மகி

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...