Friday, 10 January 2020

காலப்பயணி

தொடர்வண்டிப் பயணம்.
கவிஞனின் வரம்.
கவிதைகள் பல உண்டு.
இருந்தும் கைகள் பரபரக்கும்...

தாயை தேடும் பிள்ளையென
மழலையைத் தேடும் மனம்,
ஜன்னலோர இருக்கையை கண்டவுடன்...

காதலியின் கூந்தல் காற்றில் சுகிக்கும்
ஒருதலை காதலனென
லயிக்கும் மனம்
கம்பிகளினூடே தலை சாய்க்கும் போது... 

விடலை முடிந்தும் மழலையாக்கும்.
நரை துளிர்த்தும் முதற்காதலை எண்ணி ஏங்கும்..
அறிவியல் இல்லா காலப்பயணி..
                                                  -எழில்

2 comments:

  1. எளிய வார்த்தைகள் பயன்படுத்தினால் எழிலின் கவிதை இன்னும் எழிலாகும்

    ReplyDelete

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...