விடியலுக்காக


எல்லோரும் காத்திருக்கிறார்கள்
என் முடிவிற்காக...
நீண்ட நேரம் எழுதியும்
முடிவு பெறாத
தற்கொலை கடிதம்...
அதை முற்றுப் புள்ளி வைத்து
முடிக்கத் துடிக்கும்
கண்களின் ஓரம்
எட்டிப் பார்க்கும் கண்ணீர்...
வலியின் கடைசி தவணையை கொடுத்து
குரல்வளையை அனைக்கத்
தொங்கும் கயிறு...
"சரியான கோழை! 
அப்படி என்னப்பா துக்கம்?
தூக்குல தொங்கர அளவுக்கு!"
என பேசப் போகும் வாய்கள்...
இப்படி
எல்லோரும் காத்திருக்கிறார்கள்
என் முடிவிற்காக...
நானும் காத்திருக்கிறேன்!
முடிவிற்காக தான்...
இந்த இருளின் முடிவிற்காக...
விடியலை எதிர்நோக்கி...

                                    -மகி

Comments

Post a Comment

Popular Posts