கோபம் எங்கே?
மறதி ஒரு தேசிய வியாதி...
சிந்தனையை மடைமாற்ற
காவிகள் இங்கே உண்டு...
சக மனிதனை தாழ்ந்தவன் என
இழித்து பேசும் கூட்டத்தின் மீது
கோபம் எங்கே?
குலத்தொழிலை முன்னிறுத்தும்
பார்ப்பனிய கூட்டத்தின் மீது
கோபம் எங்கே?
பெண்களை படிக்க வைக்காதே
எனக் கூறும் இழி பிறவிகள் மீது
கோபம் எங்கே?
மனிதக் கழிவை
மனிதனே அகற்றும் அவலத்தை
அவன் கர்மவினை என்று
சொல்பவர்கள் மீது
கோபம் எங்கே?
மாட்டுக்கறி ஏற்றுமதி செய்துவிட்டு
உண்பவர்களைக் கொல்லும்
மத வெறியர்கள் மீது
கோபம் எங்கே?
சட்டம் இருந்தும்
தீண்டாமை சுவர்கள் கட்டிய
கயவர்கள் மீது
கோபம் எங்கே?
கருவறைக்குள் நுழைய
இன்றும் தடுக்கும்
பார்ப்பனியத்தின் மீது
கோபம் எங்கே?
கோபம் கொள்ள
பல அவலங்கள் உண்டு...
ஆனால் இங்கோ
கடவுளை இழி சொல் பேசினால்
வரும் கோபம்
மனிதனை கீழ்த்தரமாக நடத்தினால்
வருவதில்லை...
அவர்கள் உரிமைகள் பறிக்கப்பட்டால்
வருவதில்லை...
மறதி மட்டும் அல்ல
சாதியும் இங்கே தேசிய வியாதி...
எதிர்த்தால்
உன்னை மடைமாற்ற
மதம் மாற்ற
காவிகள் இங்குண்டு...
-எழில்
Comments
Post a Comment