Sunday, 25 August 2019

அன்றொரு நாள்...


வீட்டுப்பாடம் முடிக்காமல் போனால் என்ன நடக்கும் என்பது எனக்கு நன்றாக தெரிந்திருந்தது. இருந்தும் கொஞ்சம் திமிராகவே சென்றேன்.
மூன்றாம் வகுப்புப் படிக்கும் எனக்கு அன்று கொஞ்சம் அதிகத்திமிரு தான்.


வழக்கத்துக்கு மாறாக கைகள் பழுக்க இரண்டு அடி கூட விழுந்தது. கோபத்தையும் அழுகையையும் மறைத்துக்கொண்டு மேசையில் முகம் கவிழ்த்தி திட்டித் தீர்த்தேன். அப்போது எனக்கு தெரிந்த அதிகபட்ச வசைச் சொற்கள் அனைத்தும் பயன்படுத்தி இருந்தேன்.


அந்த வரிசையில் மூன்று வருடங்கள் என்னுடன் குப்பை கொட்டிய நம்பிக்கைக்குரிய தோழன் திடீரென்று எழுந்து  ஆசிரியரிடம் சென்று வந்தான்.

அவள் என்னை முறைத்துப் பார்த்து சொன்னாள் "பிரேக் அவர்ல என்ன வந்து பாரு".


"அந்த குண்டு ராட்சசிகிட்ட அவன் என்ன சொல்லி இருப்பான்? ஒருவேளை நான் திட்டினத சொல்லிட்டானோ......... சச்சச் இருக்காது" என்றுதான் நினைத்தேன்

நாம் நினைப்பதெல்லாம் நடந்தால் நல்லாத்தான் இருக்கும்.....


ஸ்டாஃப் ரூம் வாசலில் காத்திருந்த என்னை இயல்பான அதே முறைக்கும் பார்வையுடன் "உள்ளே வா" என்றாள்.



"நீ இன்னொரு நல்ல ஃப்ரெண்டா தேடு" என்றாள் என் மரியாதைக்குரிய குண்டு ராட்சசி.......



-அகல்




Thursday, 22 August 2019

ஒரு டீ

அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்காரு அம்மா!..

இரண்டு முறை போன் அடித்தது.

மூன்றாவது முறை அம்மா அம்மா....
போனை அட்டென்ட் செய்து "சொல்லு" என்று கத்தினான்.

இன்னும் தூங்கறயா பா? ஆபீஸ்கு டைம் ஆகலயா?

"குளிச்சிட்டு இருந்தேன். இப்ப கெளம்பீருவன். அப்புறமா நானே போன் பன்றன்" என்று சொல்லிக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்தான்.

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும்
அம்மா அம்மா....

"இப்ப என்ன உனக்கு? காலைலயே ஏன் உயிர வாங்கர" என்றான்.

சாப்பிட்டயா பா?

"இப்பதான் கடைக்கு வந்தன். அண்ணா நாலு இட்லி ஒரு வடை" என்று சத்தமாக சொல்லி விட்டு போனை கட் செய்தான்.

இங்க அதெல்லாம் இல்ல தம்பி! தினமும் டீ‌ மட்டும் தான குடிப்பீங்க என்றார் கடைக்காரர்.

"தெரியும் அண்ணே! ஒரு டீ போடுங்க" என்றான்...
      
                                  -மகி
                           

Saturday, 17 August 2019

கண்ணாமூச்சி...

சொல்லாத காதல்
சொல்லிவிட ஆசை ...
சொல்லத் துடிக்கின்றேன் ..
மாளாமல் தவிக்கின்றேன் ....

அவள் மனதை அறிய முயன்று
குழப்பமே மிச்சம் ..

விரல் எட்டும் தூரத்தில்
அவள் இருந்தும்
மனம் எட்டாதோ ??
விடை அவள் மட்டும் அறிந்ததே...

என்று முடியுமோ
இந்த காதல் கண்ணாமூச்சி !!??
                                              -எழில்

Sunday, 11 August 2019

காதல்...............

அப்பூங்காவின் இருக்கையில்
காதல் புரிய வந்தது
ஓர் இணை..

ஊடல் முடிந்து காதல் மொழி பேசும் வேளை
இருவர் கண்ணும் ஒன்றில் ஒன்று கலந்தன..

அவன் தோள் சாய்ந்து அமர்ந்தவளின் கை
பிணைந்தது அவன் கையுடன்.

அவள் காதோர நரையை வருடியபடி
நினைவுகளில் மூழ்கினான்
அக்கிழவன்..

குறையவில்லை காதல்..
நாற்பது வருடங்களுக்குப் பின்னும்...
                                                                    -எழில்        

Saturday, 3 August 2019

90's கிட்ஸ்

வாட்ஸ் அப் குரூபில்

FOREVER FRIENDS

நண்பன் 1: மச்சான், இந்த வாரம் friendship day வருதாம் டா!

நண்பன் 2: ஓ! அப்படியா...

நண்பன் 3: மச்சான் இப்பயாவுது கோவா போலாம் டா...

நண்பன் 4: என்னடா இன்னும் சின்ன பசங்க மாதிரி பேசிட்டு இருக்கீங்க

நண்பன் 5:
அவர்கள் 90's கிட்ஸ்
இன்னமும் கிட்ஸ் என்றுதான் சொல்லிக் கொள்வார்கள்!
அவர்களின் உலகம் சிறிது!
அவர்கள் கேட்டதெல்லாம்
ஒரு பாக்கெட் எலந்தவடை,
எட்டணா புலிப்பு மிட்டாய்,
ஒரு ருபா ஐஸ் ஜூஸ்!
சக்திமானும் பவர் ரேஞ்சர்ஸீமே
அவர்கள் ஹீரோக்கள்!
நான் இன்ஜினியர் ஆக போறேன்
என்று சொன்ன கடைசி
தலைமுறையினரும் இவர்களே....

இப்படியெல்லாம் அவன் டைப் செய்யும் போதே ஒரு குரல்...

"என்னங்க பையனுக்கு ஸ்க்கூல் விட்ருப்பாங்க... அந்த போன நோண்டாம போய் கூட்டிட்டு வாங்க..."

                                                               -மகி

முத்தம்....

கடற்கரைக் காற்றில்
காலம் மறந்து
பயணித்தோம்..

என்னவள் என் பின்னே..
கடற்கரை கண் முன்னே..

யாருமில்லா இரவுச் சாலை..
நிலவு செய்யும் காமன் வேலை..

அவள் இரு கரம் எனை இறுக்க..
அத்துமீற மனம் துடிக்க..

நின்று இறங்கி மண்டியிட்டேன்..
முத்தமிட்டேன்..
அவள் வயிற்றில்..

முத்தம் ..
என்னவளுக்கும் எங்கள் உயிர்க்கும்.
                                                                       -எழில் 

மறுபக்கம்

"அம்மா, நான் இனி இந்த ஸ்கூல் கு போகல மா..."


வரும்போதே முகமெல்லாம் வாடி வந்திருந்தாள் ஆனந்தி.



"ஏண்டி, என்னதான் ஆச்சு. ஏன் இப்படி பேசுற?"



"என்னால யாரோடையும் பேசக்கூட முடில மா,

பசங்கலாம் பின்னால சொல்லி கிண்டல் பண்ணுறாங்க.
நான் தப்பு தப்பா இங்கிலிஷ் பேசுறனாம்."


"அது கொஞ்ச நாள் அப்படிதாம்மா இருக்கும். சரியாகிடும்."



"இல்லம்மா, நானும் யார்கிட்டயும் பேசமலே எவ்ளோ நாள்தான் இருக்குறது.

இனி இந்த பத்தாங்கிளாஸ் லாம் வேண்டாம் மா
நான் வேணும்னா LKG , UKG கு கிளாஸ் எடுக்க போறேன்."


கண் கலங்கியது, ஆனந்திக்கும் அம்மாவுக்கும்.



#கான்வெண்டில்_படிக்காத_கான்வென்ட்_ஆசிரியைகள்


                                                                       - இருதயா




தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...