Thursday, 26 March 2020

தனிமை என்னும் அவள்..

கருவறையில் கைகோர்த்து
இருந்தாய்...
உனைப் பிரிந்ததால் 
பிறந்ததும் அழுதேன்..

ஒற்றைப் பிள்ளை என்று ஊரார் கூற
ஓடோடி வந்தென்னை
அணைத்துக் கொண்டாய்..

நம்மிடையே ரகசியங்கள் ஏது?
என் அந்தரங்கம் அறிந்தவள் நீ...

திரையரங்கில் தோள் சாய்ந்தாய்..
தவிக்கும் போது தோள் கொடுத்தாய்..

கடற்கரையில் நம்மைக் கண்டு
அந்த கடலும் பொறாமை கொள்ளும்..
உன் போல் துணை தனக்கு இல்லையென்று...

நம்பிக்கை உண்டு..
இறந்தாலும்..
என்றும் உன் துணை 
உண்டென்று...
                               -எழில்

1 comment:

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...