ஒவ்வொரு நிறுத்தமும்
ஒரு கதை சொல்லும், அவர்களுக்கு.....
கடந்த பாதையின் நினைவுகளில் மூழ்கிப் போகும் முதியோர்கள்
இல்லை இல்லை, அனுபவசாலிகள்.
நெரிசல் இருக்கிறதாம் அவர்களுக்கு.....
பள்ளி சீருடையுடன் படியில் நிற்கும் காதலன்
அவனின் பையை வைத்துக்கொள்ளவே ஜன்னலோரம் பிடிக்கும் கண்மணி
சந்திராயன் - 5 போனாலும்
எப்போதும் இருப்பார்கள் இந்த காதலர்கள்.
எல்லா இருக்கையும் ஒன்றுதான் அவர்களுக்கு.....
ராஜாவோ ரகுமானோ இயர் போன் இல் பாடிக் கொண்டிருக்க
இந்த கண்மணியும் காதலனையும் கண்டு ரசிக்கும்
ஐடி ஊழியர்கள்.
இந்த கண்மணியும் காதலனையும் கண்டு ரசிக்கும்
ஐடி ஊழியர்கள்.
எந்தப் பாம்பாமும் காதில் விழாது அவர்களுக்கு.....
கடைசி நிறுத்தத்தில் இறங்கும் பாக்கியம் கிடைத்ததால்
உழைத்துக் களைத்து, உறங்கிக்கொண்டிருக்கும்
உண்மையில் நல்லவர்கள்.
உழைத்துக் களைத்து, உறங்கிக்கொண்டிருக்கும்
உண்மையில் நல்லவர்கள்.
சுவிங்கம் வேண்டுமாம்
அவர்களுக்கு.....
"நாளை உன்னுடையது"
இந்த வசனத்தைக் கேட்ட நொடியிலிருந்து நாளைக்காக காத்திருக்கும்,
பொதி மூட்டை தூக்கும் மார்டன் சிறுவர்கள்.
அவர்களுக்கு.....
"நாளை உன்னுடையது"
இந்த வசனத்தைக் கேட்ட நொடியிலிருந்து நாளைக்காக காத்திருக்கும்,
பொதி மூட்டை தூக்கும் மார்டன் சிறுவர்கள்.
எல்லோரையும் கவனிப்பார்கள் அவர்கள்.....
நம்ம ப்ளாக்ல என்ன எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்
என்னை போன்ற மஞ்மாக்காங்கள்.
என்னை போன்ற மஞ்மாக்காங்கள்.
இந்த வைட் போர்டில் இரண்டே பேர் தான்
உறங்கிக் கொண்டிருப்பவர்கள்
உறக்கம் வராமல் கவனித்துக் கொண்டிருப்பவர்கள்.
-அகல்
No comments:
Post a Comment