Thursday, 12 December 2019
இருவர்
Saturday, 30 November 2019
Saturday, 9 November 2019
நம்பிக்கை அதான எல்லாம்
நம்புங்கள்!
சரியோ தவறோ ஆணித்தரமாக நம்புங்கள்!
மற்றவர்களையும் நம்ப வையுங்கள்!
நம்பிக்கையின் அடிப்படையில் தான்
எல்லாம் முடிவு செய்யப்படுகிறது!
நீதியும், நீதிமன்றங்களும்
மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல!
ஒருவர் பிறந்திருக்கலாம் என்ற நம்பிக்கை
இன்னொருவர் இறந்த உண்மையை விட
வலிமையானதாக மாறலாம்!
எல்லாம் அதை
நம்புபவர்களின்
எண்ணிக்கையிலும்,
அவர்கள் வகிக்கும் பதவிகளிலும்,
அவர்களின் ஆயுதங்களிலும் இருக்கிறது!
எனவே நம்புங்கள்
நம்பிக்கையின் பெயரில்
உங்களுக்கான நீதி வழங்கப்படும்!
நம்பிக்கை அதான எல்லாம்!
பி.கு.: இந்த கவிதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல!
-மகி
Friday, 4 October 2019
தொலைதூரக் காதல்
Monday, 30 September 2019
நெகிழி
நான் கேவலம் ஒரு
நெகிழியாக இருந்து விட ஆசைப்படுகிறேன்!
காரணம் அடுத்தவர்களை
அழிப்பதற்காக அல்ல
என்னை யாரும் அழித்துவிட
கூடாது என்பதற்காகத்தான்!
அடுத்தவர்களால் பயன்படுத்ப்பட்டு
தூக்கியெறியப்பட்ட பின்னும்
அவர்களை நினைத்து மக்கியது போதும்!
இனியும் எறியப்பட்டால்
நெகிழ்ந்து போகாமல்
நெகிழியைப் போல
அப்படியே இருப்பேன்
நூற்றாண்டுகள் கடந்தும்!
அவ்வளவு அக்கறை இருந்தால்
அவர்களே என்னை துடைத்து
எடுத்துக் கொள்ளட்டும்!
மறுசுழற்சிக்கு என்றும்
நான் மறுப்பதில்லை!
Thursday, 26 September 2019
நீளமான பாதை
அது ஒரு நீளமான பாதை;
ஷேர் ஆட்டோ ஏதும் ஏறாமல்
நடந்தே போனால்
விடுதி பொய் சேர
இருபது நிமிடங்கள் ஆகும்.
ஆனாலும் நடந்தே செல்கிறேன்;
நீண்ட தூரம் நடப்பது
கால்களால் சிந்திப்பது என்பார்கள்,
நடந்ததை எல்லாம் நினைத்து பார்க்க
மனது மட்டும் போதாது என்று
கால்களையும் சேர்த்துக்கொள்கிறேன்;
ஏற்கனவே பசியால் பாதி மயங்கிய கண்கள்
கால்களையும் தடுமாற வைக்க,
சுதாரித்துக் கொள்கிறேன்;
அருகில் மரங்கள் எதுவும் இல்லை
ஒரு மின்கம்பத் தூணை பிடித்துக்கொள்கிறேன்;
"நான் இயலாதவள் என்று நினைத்துத்தானே
வாய்க்கு வந்ததெல்லாம் பேசினார்கள்,
நான் ஒன்றும் அவ்வளவு பலவீனமானவள் இல்லை"
மீண்டும் எழுந்து நடக்கிறேன்;
பசி மயக்கமும்,
அவர்கள் பேசிய வார்த்தைகளும்,
இன்னும் போக வேண்டிய தூரமும்,
எரிச்சலையும் கோபத்தையுமே ஏற்படுத்த,
அடக்கத்தெரியாத மனம்
கண்ணீரால் காட்டிக்கொடுக்கிறது;
டீக்கடையில் நிற்பவர்கள் திரும்பிப்பார்க்கிறார்கள்,
கண்ணை துடைத்துக்கொள்கிறேன்
நான் ஒன்றும் பலவீனமானவள் இல்லை
மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்;
விடுதி வந்துவிட்டது.
டிபன் பாக்ஸில் எடுத்து வைத்த
காய்ந்து போன புளிசாதம்
காலையில் இருந்து எனக்காக காத்திருக்கும்,
அதை ஈரமாக்க கண்ணீரை கொஞ்சம் சேமி்த்துக்கொள்கிறேன்.
-இருதயா
Sunday, 15 September 2019
Monday, 2 September 2019
பயமா... எனக்கா...?
___________________________________
Sunday, 25 August 2019
அன்றொரு நாள்...
Thursday, 22 August 2019
ஒரு டீ
உன்ன விட்டா எனக்காரு அம்மா!..
போனை அட்டென்ட் செய்து "சொல்லு" என்று கத்தினான்.
அம்மா அம்மா....
-மகி
Saturday, 17 August 2019
Sunday, 11 August 2019
காதல்...............
காதல் புரிய வந்தது
ஓர் இணை..
ஊடல் முடிந்து காதல் மொழி பேசும் வேளை
இருவர் கண்ணும் ஒன்றில் ஒன்று கலந்தன..
அவன் தோள் சாய்ந்து அமர்ந்தவளின் கை
பிணைந்தது அவன் கையுடன்.
அவள் காதோர நரையை வருடியபடி
நினைவுகளில் மூழ்கினான்
அக்கிழவன்..
குறையவில்லை காதல்..
நாற்பது வருடங்களுக்குப் பின்னும்...
-எழில்
Saturday, 3 August 2019
90's கிட்ஸ்
அவர்கள் 90's கிட்ஸ்
இன்னமும் கிட்ஸ் என்றுதான் சொல்லிக் கொள்வார்கள்!
அவர்களின் உலகம் சிறிது!
அவர்கள் கேட்டதெல்லாம்
ஒரு பாக்கெட் எலந்தவடை,
எட்டணா புலிப்பு மிட்டாய்,
ஒரு ருபா ஐஸ் ஜூஸ்!
சக்திமானும் பவர் ரேஞ்சர்ஸீமே
அவர்கள் ஹீரோக்கள்!
நான் இன்ஜினியர் ஆக போறேன்
என்று சொன்ன கடைசி
தலைமுறையினரும் இவர்களே....
முத்தம்....
காலம் மறந்து
பயணித்தோம்..
என்னவள் என் பின்னே..
கடற்கரை கண் முன்னே..
யாருமில்லா இரவுச் சாலை..
நிலவு செய்யும் காமன் வேலை..
அவள் இரு கரம் எனை இறுக்க..
அத்துமீற மனம் துடிக்க..
நின்று இறங்கி மண்டியிட்டேன்..
முத்தமிட்டேன்..
அவள் வயிற்றில்..
முத்தம் ..
என்னவளுக்கும் எங்கள் உயிர்க்கும்.
-எழில்
மறுபக்கம்
வரும்போதே முகமெல்லாம் வாடி வந்திருந்தாள் ஆனந்தி.
"ஏண்டி, என்னதான் ஆச்சு. ஏன் இப்படி பேசுற?"
"என்னால யாரோடையும் பேசக்கூட முடில மா,
பசங்கலாம் பின்னால சொல்லி கிண்டல் பண்ணுறாங்க.
நான் தப்பு தப்பா இங்கிலிஷ் பேசுறனாம்."
"அது கொஞ்ச நாள் அப்படிதாம்மா இருக்கும். சரியாகிடும்."
"இல்லம்மா, நானும் யார்கிட்டயும் பேசமலே எவ்ளோ நாள்தான் இருக்குறது.
இனி இந்த பத்தாங்கிளாஸ் லாம் வேண்டாம் மா.
நான் வேணும்னா LKG , UKG கு கிளாஸ் எடுக்க போறேன்."
கண் கலங்கியது, ஆனந்திக்கும் அம்மாவுக்கும்.
#கான்வெண்டில்_படிக்காத_கான்வெ
- இருதயா
Wednesday, 24 July 2019
இலையுதிர் காலம்
மரங்களுக்கு மட்டும் அன்றி
மனிதருக்கும் வேண்டும்
இலையுதிர் காலம்!
நம்பியவரெல்லாம் விலகிப் போனால்
நாமும் மொட்டை மரம்தான்!
இது யாரின் குற்றம்?
உதிர்ந்து சென்ற இலையின் குற்றமா?
உதிர விட்ட மரத்தின் குற்றமா?
உதிர்த்து விட்ட விதியின் குற்றமா?
தெரியவில்லை!
இவ்வளவு தான்
மரத்திற்கும் இலைக்கும்
உள்ள சொந்தமா?
இல்லை! இல்லவே இல்லை!
உதிர்ந்து விடும் என்று தெரிந்தும்
இலைக்கு இடம் கொடுக்கும் மரம்!
உதிர்ந்த பின்னும்
மரத்திற்கு உரமாகும் இலை!
இவைகளை போல
அன்பு செய்ய
நமக்கும் வேண்டும் ஒரு
இலையுதிர் காலம்!
-மகி
Thursday, 11 July 2019
மீன் குழம்பு
அவ்வளவு கிராக்கி!
அதை நினைத்தாலே
தீரா சுனையாக
என் நாவூறுகிறதே!
அதை தட்டில் வைத்து
சோற்றோடு சேர்ந்து பிசைகையில்
பல கைகள் வந்து சேரும்
அதை பங்கு போட!
முந்துவோருக்கு மீனும்
பிந்துவோருக்கு முள்ளும் ஆதலால்
சில சமயம்
நாகரீக நாய்களாவோம்!
உண்மையில் அவ்வளவு கிராக்கி தான்
அந்த மீன் குழம்பிற்கு!
-மகி
Wednesday, 19 June 2019
பாக்கியசாலிகள்
பல மாதங்களாக
மழையை காணாமல்
எங்காவது மழை பெய்தால்
"அடேயப்பா அவ்வளவு மழை பேஞ்சுதா?"
என்று நாங்கள்
அங்கலாய்த்து கொண்டிருக்கையில்
மழையில் நனையும்
அவர்கள் பாக்கியசாலிகள்!
பைப்பை திறந்தவுடன்
தண்ணீர் வருவதை பார்க்கும்
அவர்கள் பாக்கியசாலிகள்!
நாங்கள் மழை வேண்டி
காத்திருக்கும் போது
World Cup மேட்ச்சில்
மழை வரக்கூடாது என்று வேண்டும்
அவர்கள் உண்மையில் பாக்கியசாலிகளே!
இப்படிக்கு
துரதிஷ்டசாலி
Wednesday, 1 May 2019
நீயே சொல் MCC
இதோ முடிந்துவிட்டது!
என் வாழ்வின் இனிமையான பக்கங்கள்
இதோ முடிந்துவிட்டது!
கண் மூடி திறக்கும் முன்
மூன்று வருடங்கள் முடிந்து விட்டது!
இதோ போகிறேன்
உயிருள்ள பிணமாய்
என் இறுதி ஊர்வலத்தில்
நான் விட்டுச் சென்ற
நினைவுகளை தேடி!
காலியாய் இருக்கும் வகுப்பறைகள்,
மர பெஞ்ச்சுகள்,
அதன் கல்வெட்டுக்கள்,
என எல்லாம் கடந்து போகிறேன்!
மலர் தூவும் மரங்கள்,
அந்த மலர் மறைக்கும்,
தார் ரோடுகள்,
அதில் விளையாடும் மான்கள்,
என எல்லாம் கடந்து போகிறேன்! ஒருவேளை,
கடந்து போவது தான் வாழ்க்கையோ?
விடை தெரியவில்லை!
உன்னிடம் விடைபெற்றுப்
போகவும் மனமில்லை!
என் செய்வேன்?
நீயே சொல்
என் இனிய MCC!
Tuesday, 30 April 2019
Wednesday, 24 April 2019
செல்லத்தின் செல்லமான பதில்
"ஆமாம்மா,
செல்லமே, நீயும் வளர்ந்ததும் இவங்கள மாதிரி ஆவுரியா,
உன்னையும் எல்லாரும் பெருமையா பேசுவாங்க"
"அவங்க ஓடி முடிச்சதும் மூச்சு வாங்கும் இல்லப்பா, அப்போ அவங்களுக்கு யாருப்பா தண்ணி கொடுப்பா ? "
"அதுக்கு வேலைக்கு ஆள் இருக்கும்மா"
"நான் பெருசானதும் அந்த வேலைக்கு போகட்டுமா அப்பா?"
-அகல்
Thursday, 4 April 2019
என்ன சொல்ல
யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல்
தனியாய் சென்ற adult சினிமாவில்
பக்கத்து இருக்கையில்
என் ஆசிரியரை
கண்ட போது
என்ன சொல்ல.....?
மாத கடைசி, பணம் இல்லாத நேரம்
காதலியின் பிறந்தநாள்,
ஓசி தம் ஒன்றை பரிசளித்து,
"இத்தோடு இப்பழக்கத்தை
விட்டு விடுகிறேன்"
என்று சத்தியம் செய்தேன்.
அவள் முகம் மலர்ந்தாள், "உண்மையா" என்றாள்
என்ன சொல்ல....?
எப்போதும் செய்யும் தவறுகளை
எண்ணிக் கொண்டு
நான் மூடன் என்பதை உணர்ந்த பின்பும்,
"நீ மட்டுமே முட்டாள்" என்று சில
அறிவி ஜீவிகளின் புலம்பல்களை
கேட்ட பின்
என்ன சொல்ல......?
இரவு 11ஐ கடந்த யாருமில்லா சாலை,
புகைத்துக் கொண்டே
காலார நடை பயணம்,
எதிரில்,
யாரோ முடிவு செய்த அழகை தனக்குள்
கொண்டு வர செய்த மேக்-அப் உடன் ஒருத்தி
"இன்னைக்கு நைட் என் கூட இருங்க,
கையில இருக்கிறத கொடுங்க,
நாளைக்குள்ள என் மகளுக்கு ஃபீஸ் கட்டணும்" என்றாள்,
வந்த விலைமகளிடம் என்ன சொல்ல......?
-அகல்
Friday, 1 March 2019
அப்பா
-னு கேட்டவங்களுக்கு
"ஆமா! பொம்பள பிள்ளைதான்"
-னு சொல்லி sweet குடுத்தவர் !
"காசு இல்லனாலும்
என் பொண்ணு convent ல தான் படிக்கணும்"
-னு சொல்லி கஷ்டப்பட்டவர் !
"பையன் இல்லையே"
-னு கேட்டவங்களுக்கு
"மகனுக்கு மகனா வளர்த்த
மகள் இருக்கா" னு சொன்னவர்
மத்த பொண்ணுங்க மாதிரி
அடுப்படியில கிடக்கக்கூடாதுன்னு
"அவள வேலை வாங்காத"
-னு மனைவியை கண்டித்தவர் !
காதலை விட கலாச்சாரத்த விட
கனவுதான் முக்கியம்
னு சொல்லிக்கொடுத்தவர் !
அவள் கனவு நனவாக
தன் தூக்கத்தை எல்லாம்
தொலைத்தவர் !
இத்தனை கஷ்டத்தை தாங்கிப் பிடித்தவரின்
முதல் சொட்டு கண்ணீர்...
அவள் மணமேடையில் இருக்கையில் !
ஆமாம்,
இன்னும் 5 வருஷத்தில்
கண்ணீர் சிந்துறது
அவளாகல்லவா இருக்கும் !
மறந்துவிட்டார் போலும்
தான் செய்ததைத்தான்
மருமகனும் செய்வான் என்று !
Wednesday, 13 February 2019
என் இனிய MCC
எனக்கு நம்பிக்கை இல்லை
உன்னைப் பார்க்கும் வரையில்!
செயற்கைக்கு பழகிப்போன என் உடம்பில்
உன் இயற்கை காற்று பட்டதும்
சிலிர்த்துக் கொண்டேன்!
கணிதம் மட்டுமே பயில வந்தேன்
உன் மரங்களுக்கு அடியில் அமர்ந்ததால்
கவிஞனானேன்!
தாயைப் பிரிந்து வந்த எனக்கு
நீயே தாயும் ஆனாய்!
நண்பர்கள் என்ற சொந்தத்தையும்
நீயே எனக்கு கொடுத்தாய்!
கம்பிகளுக்குப் பின்னால் கைதியாக
இருக்கும் மான்களை பார்த்திருக்கிறேன்!
உன்னிடம் மட்டும்தான் அவை
கைகோர்த்து விளையாடுவதை பார்க்கிறேன்!
பசிக்கு டே கேன்டீன்
படிக்க மில்லர் லைப்ரரி
விளையாட பெவிலியன்
அரட்டை அடிக்க கட்டர்ஸ்
இணையத்திற்கு கிபில்'ஸ் நெட் சென்டர்
மணி பார்க்க சன்டயல்
பாரம்பரியத்திற்கு ஆண்டர்சன் ஹால்
பரிட்சைக்கு எக்ஸாமினேஷன் ஹால்
இப்படி உன் அழகை
சொல்லி மாளாது!
இமை கொட்டாமல்
உன் இயற்கையை ரசித்ததில்
என் இளங்கலை முடிந்துவிட்டது!
மீண்டும் உன்னிடம் வருவேனா?
எனக்கு தெரியவில்லை!
ஆனால் நிச்சயம்
என் மகனையும் மகளையும்
உன்னிடம் அனுப்பிவைப்பேன்!
உன்னைவிட வேறு யார்
அவர்களை நன்றாக
பார்த்துக்கொள்வார்?
நீயே சொல்
என் இனிய MCC!
-மகி
Thursday, 17 January 2019
குருதித் தாகம்
குருதித் தாகம்...
தானமில்லை, தாகம்தான்
எனக்கு!
நான் காட்டுமிராண்டியோ,
காட்டேரியோ என்னவென்று
எனக்கு சொல்லத் தெரியவில்லை!
என்னோடு இருந்த
எனக்காகவே இருந்த
உன்னையும் அழவைத்துப் பார்த்தேன்!
எனக்காக நீ தூக்கம் தொலைத்த
இரவுகள் அறிந்தும்
மீண்டும் வலி கொடுத்தேன்!
எனக்குப் பிடித்ததை செய்து
எனக்குப் பிடித்ததையே நீ
உண்டபின்னும் உன்னை
எட்டித்தான் உதைத்தேன்!
சொல்லப்போனால்
தினம் தினம் உன் இரத்தத்தை
உறிஞ்சிக் குடித்தேன்!
அவ்வளவு தாகம் எனக்கு
குருதித் தாகம்!
ஆனால் முடிந்தால்
இன்னொரு வாய்ப்புத்தாயேன்!
ஐந்து வருட கொடுமைக்காரனுக்கு
மீண்டும் வாய்ப்பு கொடுக்கும் நீ
பத்து மாதம் வலி தந்த எனக்கு
கொடுக்கமாட்டாயோ?
உன் உதிரத்தில் உதித்து
குருதியை குடித்து
உலகிற்கு வந்தவள்,
மீண்டும் ஒருமுறை
உன்னை அழவைக்கமாட்டேன்!
-இருதயா
தவற விட்டு விடக்கூடாது
அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம் கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...
-
உரையாடல்... நீளும்.. சலிக்காது.. தீண்டல்... தித்திக்கும்.. திகட்டாது.. ஊடல்.. உரைக்கும்..உடைக்காது... காதல்.. தேடும்.. தொடரும்... ...
-
எப்போதும் பார்த்து சிரிக்கும் லிப்ட் ஆப்பரேட்டர் தான் இன்று ஏனோ என்னால் முடியவில்லை... முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டேன்! மேனேஜரிடம் வாங...


















